தமிழகத்தில் 5 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் 5 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 10 April 2021 12:20 AM GMT (Updated: 10 April 2021 12:20 AM GMT)

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

5 ஆயிரத்து 441 பேர்

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 87 ஆயிரத்து 505 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 ஆயிரத்து 289 ஆண்கள், 2 ஆயிரத்து 152 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 1,752 பேரும், கோவையில் 473 பேரும், செங்கல்பட்டில் 468 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 11 பேரும், பெரம்பலூரில் 5 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

23 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 9 லட்சத்து 20 ஆயிரத்து 827 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 14 பேரும், தனியார் மருத்துவமனையில் 9 பேரும் என 23 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 10 பேரும், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சியில் தலா இருவரும், செங்கல்பட்டு, கோவை, காஞ்சீபுரம், மதுரை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, விருதுநகரில் தலா ஒருவரும் என 11 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 863 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

1,890 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,890 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 33 ஆயிரத்து 659 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Next Story