இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி- தமிழக அரசு


இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி- தமிழக அரசு
x
தினத்தந்தி 8 May 2021 4:12 AM GMT (Updated: 8 May 2021 4:12 AM GMT)

முழு ஊரடங்கு அமலாக இருப்பதால் இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி காலை 4 மணி முதல்  24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 முழு ஊரடங்கு திங்கள் கிழமை முதல் அமலாக இருப்பதால் இன்றும் நாளையும் கடைகள், நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


Next Story