தமிழக முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு


தமிழக முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 8 May 2021 8:39 AM GMT (Updated: 8 May 2021 8:39 AM GMT)

கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்து முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். 

இந்த சூழலில், தமிழக முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது, கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் தகவல்கள் கூறுகின்றன. 

முன்னதாக, மராட்டியம், இமாசல பிரதேசம், மத்திய பிரதேச மாநில முதல் மந்திரிகளுடனும் பிரதமர் மோடி, கொரோனா விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்தார். 

Next Story