கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம் - அரசாணை வெளீயிடு
கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளீயிட்டுள்ளது.
சென்னை,
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக புதிதாக 2,100 சுகாதாரப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் 6 மாதத்திற்கு பணியில் இருப்பார்கள்.
தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொகுப்பூதியமாக தலா ரூ. 60,000 வழங்கப்படும். ஊதிய செலவினங்களுக்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story