மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தடுப்போம் - அமைச்சர் துரைமுருகன்


மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தடுப்போம் - அமைச்சர் துரைமுருகன்
x
தினத்தந்தி 7 July 2021 7:06 AM GMT (Updated: 7 July 2021 7:06 AM GMT)

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தடுப்போம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சென்னை

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட, மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ, அணை கட்ட கர்நாடகா எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை கட்டுவது  தொடர்பாக கர்நாடக முதல்-அமைச்சர் எடியூரப்பா தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் அளித்துள்ள துரைமுருகன், அணை கட்டுவதை தடுத்து நிறுத்த சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு விவசாயிகள் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா பயிர் செய்ய காவிரி நீரையே நம்பி உள்ளனர் எனவே மேகதாது அணைத் திட்டத்தை கைவிடுமாறு முதல்- அமைச்சர் முக ஸ்டாலின் எடியூரப்பாவை கடிதம் வாயிலாக வலியுறுத்தி உள்ளதையும் துரைமுருகன் சுட்டிக்காட்டி உள்ளார்.

Next Story