டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடி வெகுமதி


டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடி வெகுமதி
x
தினத்தந்தி 9 Aug 2021 9:01 PM GMT (Updated: 9 Aug 2021 9:01 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, பைஜூஸ் நிறுவனம் ரூ.2 கோடி வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.

சென்னை,

ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்களான நீரஜ் சோப்ரா, மீராபாய் சானு, ரவிக்குமார் தஹியா, லவ்லினா, போர்கோஹெய்ன், பி.வி.சிந்து, பஜ்ரங் புனியா ஆகியோர் பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்து இருக்கின்றனர்.

அவர்களை கவுரவிக்கும் விதமாக அந்தந்த மாநில அரசுகள் ஊக்கப்பரிசுகளை அறிவித்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக இந்த 7 விளையாட்டு வீரர்களின் சாதனைகளை போற்றும் வகையில் பைஜூஸ் நிறுவனமும் ஊக்கத்தொகையை அறிவித்து இருக்கிறது.

அதன்படி, தடகளத்தில் இந்திய வரலாற்றில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடியும், மற்ற விளையாட்டு வீரர்களான மீராபாய் சானு, ரவிக்குமார் தஹியா, லவ்லினா, போர்கோஹெய்ன், பி.வி.சிந்து, பஜ்ரங் புனியா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடியும் வழங்குகிறது.

பைஜூஸ் நிறுவனம்

இதுகுறித்து பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பைஜூ ரவீந்திரன் கூறியதாவது:-

தேசத்தை கட்டமைப்பதில் விளையாட்டுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஒலிம்பிக் கதாநாயகர்களை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டிய நேரம் இது. அவர்கள் பெறும் பாராட்டுகளுக்கு தகுதியானவர்கள்.

டோக்கியோ 2020-ல் இந்த வரலாற்று சாதனைக்கு பிறகு வீரர்களின் முயற்சிகள், தியாகங்கள் மற்றும் சாதனைகளுக்கு நாங்கள் வெகுமதி அளிக்கிறோம். இந்த சிறிய செயல் அவர்களின் பயணத்தில், நாட்டிற்கு அதிக விருதுகளை வெல்ல மேலும் பல இளைஞர்களை, பெரிய கனவு காண ஊக்குவிக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story