2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாததால் பரிதாபம்
வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
ஊட்டி,
ஊட்டி மார்லிமந்து பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 45), பால் வியாபாரி. இவருடைய மனைவி கீதா (35). இவர்களுக்கு ரஷீதா (16) என்ற மகளும், விஸ்வந்தர் (12) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சந்திரன் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. பின் பகுதியில் உள்ள கொட்டகையில் கட்டப்பட்டு இருந்த மாடு பலமுறை கத்திக்கொண்டே இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து, சந்திரன் வீட்டின் கதவை தட்டினார்கள். அவர்கள் பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. எனவே வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது சந்திரன், கீதா ஆகியோர் வீட்டிற்குள் தூக்கில் தொங்கியபடியும், 2 குழந்தைகளும் கட்டிலில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை
பின்னர் அவர்கள் இதுகுறித்து புதுமந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சந்திரன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று 4 பேரின் உடல்ளையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு சந்திரன், கீதா ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-
கடன் பிரச்சினையால் விபரீத முடிவு
கொரோனா காரணமாக சந்திரனுக்கு சரியாக பால் வியாபாரம் ஆகாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி விவசாயம் செய்து உள்ளார். அதில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. அத்துடன் தனக்கு கடன் கொடுத்தவர்களுக்கு திரும்ப கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தமும் சந்திரனுக்கு ஏற்பட்டது. கடன் வாங்கியவர்களுக்கு திரும்ப கொடுக்கவில்லை என்றால், அவர்கள் வீட்டிற்கு வந்து கேட்கும்போது, தனது நன்மதிப்பு பாதிக்கும் என்று அவர் எண்ணி உள்ளார். எனவே குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மனைவியிடம் கூறி உள்ளார்.
அதன்படி தம்பதி இருவரும் மனதை கல்லாக்கி கொண்டு விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) சாப்பாட்டில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து கொன்றுவிட்டு தாங்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி மார்லிமந்து பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 45), பால் வியாபாரி. இவருடைய மனைவி கீதா (35). இவர்களுக்கு ரஷீதா (16) என்ற மகளும், விஸ்வந்தர் (12) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சந்திரன் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. பின் பகுதியில் உள்ள கொட்டகையில் கட்டப்பட்டு இருந்த மாடு பலமுறை கத்திக்கொண்டே இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து, சந்திரன் வீட்டின் கதவை தட்டினார்கள். அவர்கள் பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. எனவே வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது சந்திரன், கீதா ஆகியோர் வீட்டிற்குள் தூக்கில் தொங்கியபடியும், 2 குழந்தைகளும் கட்டிலில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை
பின்னர் அவர்கள் இதுகுறித்து புதுமந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சந்திரன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று 4 பேரின் உடல்ளையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு சந்திரன், கீதா ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-
கடன் பிரச்சினையால் விபரீத முடிவு
கொரோனா காரணமாக சந்திரனுக்கு சரியாக பால் வியாபாரம் ஆகாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி விவசாயம் செய்து உள்ளார். அதில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. அத்துடன் தனக்கு கடன் கொடுத்தவர்களுக்கு திரும்ப கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தமும் சந்திரனுக்கு ஏற்பட்டது. கடன் வாங்கியவர்களுக்கு திரும்ப கொடுக்கவில்லை என்றால், அவர்கள் வீட்டிற்கு வந்து கேட்கும்போது, தனது நன்மதிப்பு பாதிக்கும் என்று அவர் எண்ணி உள்ளார். எனவே குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மனைவியிடம் கூறி உள்ளார்.
அதன்படி தம்பதி இருவரும் மனதை கல்லாக்கி கொண்டு விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) சாப்பாட்டில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து கொன்றுவிட்டு தாங்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story