தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சுமித் அன்டிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சுமித் அன்டிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 30 Aug 2021 12:36 PM GMT (Updated: 30 Aug 2021 12:36 PM GMT)

தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சுமித் அன்டிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை,

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டித் தொடரின்  7-வது நாளான இன்று, டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுமித் அன்டில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 

தங்க பதக்கம் வென்றுள்ள சுமித் அண்டிலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.  அந்த வகையில்,  தங்க பதக்கம் வென்ற சுமித் அன்டிலுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story