திருமண இணையதள மோசடி: கைதான நைஜீரிய ஆசாமிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை


திருமண இணையதள மோசடி: கைதான நைஜீரிய ஆசாமிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை
x
தினத்தந்தி 15 Sep 2021 9:05 PM GMT (Updated: 15 Sep 2021 9:05 PM GMT)

திருமண இணையதள மோசடி: கைதான நைஜீரிய ஆசாமிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை 32 பெண்களை ஏமாற்றியதாக திடுக்கிடும் வாக்குமூலம்.

சென்னை,

தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி இளம்பெண்களிடம் திருமண இணையதளம் வாயிலாக பண மோசடியில் ஈடுபட்டதாக டெல்லியில் தங்கி இருந்த நைஜீரிய ஆசாமிகள் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தமிழகம் முழுவதும் 32 இளம்பெண்கள் தங்களது மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்துள்ளதாக அவர்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினார்கள்.

ரூ.1½ கோடி அளவுக்கு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் பெண் உள்பட மேலும் 5 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

Next Story