அனைத்து சாதி மக்களுக்கும் 100 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க உறுதியேற்போம் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு
அனைத்து சாதி மக்களுக்கும் 100 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க உறுதியேற்போம் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாகாணத்தில் அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமுதாயங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான முதலாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை பிறப்பிக்கப்பட்டதன் நூற்றாண்டு இன்று (நேற்று). சமூகநீதிச் சாதனையின் நூற்றாண்டை கொண்டாடுவோம்.
சென்னை மாகாணத்தில் 1927 முதல் அரசு வேலைவாய்ப்புகளில் 100 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அடித்தளம் அமைத்ததும், 1935-ம் ஆண்டில் மத்திய அரசுப் பணிகளில் 100 சதவீத இட ஒதுக்கீடு சாத்தியமானதற்கும் அடிப்படையாக அமைந்தது இந்த அரசாணையே.
தமிழ்நாட்டில் அனைத்து சாதி மக்களுக்கும் அவர்கள் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப சமூக நீதி வழங்கும் 100 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதே நமது இலக்கு. அந்த இலக்கை சாத்தியமாக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாகாணத்தில் அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமுதாயங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான முதலாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை பிறப்பிக்கப்பட்டதன் நூற்றாண்டு இன்று (நேற்று). சமூகநீதிச் சாதனையின் நூற்றாண்டை கொண்டாடுவோம்.
சென்னை மாகாணத்தில் 1927 முதல் அரசு வேலைவாய்ப்புகளில் 100 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அடித்தளம் அமைத்ததும், 1935-ம் ஆண்டில் மத்திய அரசுப் பணிகளில் 100 சதவீத இட ஒதுக்கீடு சாத்தியமானதற்கும் அடிப்படையாக அமைந்தது இந்த அரசாணையே.
தமிழ்நாட்டில் அனைத்து சாதி மக்களுக்கும் அவர்கள் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப சமூக நீதி வழங்கும் 100 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதே நமது இலக்கு. அந்த இலக்கை சாத்தியமாக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story