கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள் தொண்டர்களுக்கு, கமல்ஹாசன் வேண்டுகோள்


கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள் தொண்டர்களுக்கு, கமல்ஹாசன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 23 Sep 2021 7:06 PM GMT (Updated: 23 Sep 2021 7:06 PM GMT)

கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள் தொண்டர்களுக்கு, கமல்ஹாசன் வேண்டுகோள்.

சென்னை,

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிராம சபைகளைப் பொறுத்தவரை ‘கடைசி மனிதனுக்கும் அதிகாரம்’ எனும் காந்தியின் கனவே நம்முடைய கனவு. கிராம சபைகளின் முக்கியத்துவத்தை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் பணியை மக்கள் நீதி மய்யம் திறம்படச் செய்தது எனும் பெருமை நமக்கு உண்டு.

கிராம சபைகளை கண்டு அஞ்சுவதும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதை நடத்தாமல் இருப்பதிலும் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. கொரோனா பெருந்தொற்று இவர்களுக்கு மிக வசதியான ஒரு காரணமாக அமைந்தது.

மக்கள் நீதி மய்யத்திற்கு இது முதல் உள்ளாட்சித் தேர்தல். நானும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தேர்தல் நடக்காத பகுதிகளில் நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யத்தினர் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story