கள்ளக்காதலியுடன் ஆபாச வீடியோ: போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்


கள்ளக்காதலியுடன் ஆபாச வீடியோ: போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 3 Oct 2021 11:29 PM GMT (Updated: 3 Oct 2021 11:29 PM GMT)

கள்ளக்காதலியுடன் ஆபாச வீடியோ மூலம் பேசிய திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் முனிசேகர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் இன்ஸ்பெக்டர் முனிசேகருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் அவர் ஆபாச வீடியோ கால் பேசியதாகவும் கூறப்படுகிறது.

அந்த பெண் அடிக்கடி திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நெல்வாய் பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு செல்வதாக கணவரிடம் கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அவர், பெண்ணின் செல்போனை பரிசோதித்துள்ளார். அப்போதுதான் இன்ஸ்பெக்டருடன் அந்த பெண்ணுக்கு உள்ள கள்ளத்தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து தனது மனைவியின் செல்போனில் பதிவாகி இருந்த முனிசேகரின் அந்தரங்க புகைப்படங்களையும், அவர் அனுப்பிய குறுந்தகவல்களையும் சேகரித்த அவர், இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் டி.ஜி.பி.க்கு புகார் அனுப்பினார்.

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

அதன்பேரில் டி.ஜி.பி. விசாரணை நடத்தி திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது டி.ஜி.பி. அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் தனிப்படை

கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் வடமாநில கும்பல் நகையை கொள்ளையடித்து சென்றது.

இந்த கும்பலை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற போலீஸ் தனிப்படையில் இடம் பெற்றவர் இன்ஸ்பெக்டர் முனிசேகர். முக்கிய குற்றவாளி நாதுராம் என்பவரை பிடிக்க முயன்றபோது முனிசேகர் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் மற்றொரு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் என்பவர் இறந்தார். இதுகுறித்து ராஜஸ்தான் போலீசார் முனிசேகர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த சமயத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

Next Story