தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சூழலில் வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக இயல்பு வாழ்க்கை தொடர்ந்து முடங்கி போயுள்ளது.
தொடர் கனமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளநீரில் சிக்கி தவித்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு, நிவாரண நிதி ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படுகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் நிதி ஆதாரம் உள்ளிட்டவை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
Related Tags :
Next Story