கன்னியாகுமரியில் மழை பாதிப்பு குறித்து நாளை மத்திய குழு ஆய்வு


கன்னியாகுமரியில் மழை பாதிப்பு குறித்து நாளை மத்திய குழு ஆய்வு
x
தினத்தந்தி 21 Nov 2021 5:10 PM GMT (Updated: 21 Nov 2021 5:10 PM GMT)

கன்னியாகுமரியில் மழை பாதிப்பு குறித்து 11 இடங்களில் நாளை மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

கன்னியாகுமரி,

கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் நாளை கன்னியாகுமரிக்கு செல்கின்றனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தரும் இந்த குழுவினர், பின்னர் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு செல்ல உள்ளனர்.

கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையில் வெள்ள சேதம் தொடர்பான புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின்பு, வடக்கு தாமரைக்குளம், குமாரகோவில், பேயன்குழி, வைக்கல்லூர் ஆகிய பகுதிகளில் 11 இடங்களில் சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட உள்ளனர். இதன் பின்னர் அவர்கள் இரவு மீண்டும் தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். 

Next Story