நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்


கோப்புப் படம் (பிடிஐ)
x
கோப்புப் படம் (பிடிஐ)
தினத்தந்தி 14 May 2022 10:20 AM GMT (Updated: 14 May 2022 10:20 AM GMT)

இள நிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்தற்கான கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் 6 ந் தேதி தொடங்கியது. இதுவரை சுமாா் 20 லட்சம் மாணவ மாணவியா் இந்த தோ்விற்கு விண்ணப்பித்துள்ளனா். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தோ்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.

Next Story