எலக்ட்ரீசியன் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை கொள்ளை


எலக்ட்ரீசியன் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை கொள்ளை
x

சின்னசேலம் அருகே எலக்ட்ரீசியன் வீட்டில் ரூ.3½ லட்சம் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே இந்திலி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் ரமேஷ் (வயது 36) எலக்ட்ரீசியன். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் காந்தி நகரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து அவர் வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் டி.வி.ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

வலைவீச்சு

இதுகுறித்த தகவலின் பேரில் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் ரமேஷ் வீட்டை பூட்டு விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நகை, பணம் மற்றும் டி.வி.யை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story