போட்டி போட்டு பஸ்களை ஓட்டியதால் விபத்து: திருச்சியில் அரசு பஸ்கள் மோதல் 30 பேர் காயம்


போட்டி போட்டு பஸ்களை ஓட்டியதால் விபத்து: திருச்சியில் அரசு பஸ்கள் மோதல் 30 பேர் காயம்
x
தினத்தந்தி 9 April 2023 8:53 AM GMT (Updated: 9 April 2023 10:26 AM GMT)

போட்டி போட்டு கொண்டு பஸ்களை ஓட்டியதால் திருச்சியில் அரசு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 30 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி,

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி ஒரு அரசு விரைவு பஸ்சும், சாதாரண கட்டண பஸ்சும் புறப்பட்டது. திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் பால்பண்ணை அருகே சென்ற போது முன்னே சென்ற விரைவு பஸ் பிரேக் அடித்த போது, பின்னால் சென்ற பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

போட்டி போட்டு அரசு பஸ்களை ஓட்டியதால் விபத்து நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தால் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story