தூங்கிக் கொண்டிருந்த பெண் நள்ளிரவில் வெட்டி படுகொலை


தூங்கிக் கொண்டிருந்த பெண் நள்ளிரவில் வெட்டி படுகொலை
x

கலசபாக்கம் அருகே வீட்டு திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த பெண் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே வீட்டு திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த பெண் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குடும்பம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த காலூர் கிராமம் செல்வா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். சென்னையில் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (வயது 45). இவர்களது மகன் சிவகுமார் (22) சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகள் பிரியங்காவுக்கு (20) திருமணமாகி விட்டதால் சாந்தி தனிமையில் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சாந்தி வீட்டின் முன்புறத்தில் உள்ள திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டிருந்த சாந்தியை முகம், கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிவிட்டனர்.

போலீசார் விரைவு

நேற்று காலை அங்கு வந்தவர்கள் சாந்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் தடயங்களை சேகரித்தனர். பின்னர் உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சாந்தி கொலை செய்யப்பட்ட இடத்தில் மோப்பம் பிடிக்க விடப்பட்டது.

விசாரணை

சாந்தியை முன்விரோத தகராறில் யாரும் கொலை செய்தனரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய மர்மநபர்களை வருகின்றனர்.

தனிமையில் திண்ணையில் படுத்து தூங்கிய பெண் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story