டாஸ்மாக் கடைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு


டாஸ்மாக் கடைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
x

ஏற்காட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்குள் ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்காடு,

ஏற்காட்டின் போட்டு காடு கிராமம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை திறந்த போது, ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், கடையை மூடிவிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் .

உடனடியாக, சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், மது பெட்டிகளுக்கு இடையே சிக்கி இருந்த சாரை பாம்பை மீட்டனர். இதனால், மதுப்பிரியர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்.


Next Story