கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில்வெவ்வேறு விபத்துகளில் 2 மூதாட்டிகள் பலி


கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில்வெவ்வேறு விபத்துகளில் 2 மூதாட்டிகள் பலி
x
தினத்தந்தி 24 May 2023 7:00 PM GMT (Updated: 24 May 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 மூதாட்டிகள் பலியாகினர்.

மூதாட்டி

கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் வேட்டியம்பட்டியில், 63 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த 22-ந் தேதி அதிகாலை நடந்து சென்று கெர்ணடிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு விபத்து

காவேரிப்பட்டணம் அருகே உள்ள இடைபையூரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 66). இவர் கிருஷ்ணகிரி- தர்மபுரி சாலையில் பையூரில் உள்ள ஜூஸ் பேக்டரி அருகில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஜீப் ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

மேலும் ஜீப்பை ஓட்டி வந்த திண்டிவனத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் (40), உடன் வந்த கணேஷ்குமார் (40) ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story