மறைந்த உறுப்பினர்கள், தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவை நாள் முழுதும் ஒத்திவைப்பு


மறைந்த உறுப்பினர்கள், தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவை நாள் முழுதும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 17 Oct 2022 5:32 AM GMT (Updated: 17 Oct 2022 5:35 AM GMT)

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மறைந்த உறுப்பினர்கள், தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்தது அவை ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர்ந் இன்று நடைபெற்றது. அதிமுகவின் உள்கட்சி பிரச்சனை காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டதில் பங்கேற்கவில்லை. ஆனால், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.

சட்டப்பேரவையின் முதல் நாள் நடவடிக்கையில் மறைந்த உறுப்பினர்கள், தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு மணி துளிகள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, அவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மீண்டும் சட்டப்பேரவை நாளை காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


Next Story