அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறது புரட்சி பாரதம் கட்சி


அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறது புரட்சி பாரதம் கட்சி
x

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில் தொடர்வதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில் தொடர்வதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார்.

மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி 1 தொகுதியை பெற்று போட்டியிடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் தொகுதிகளை விருப்பப் பட்டியலாக அளித்து, அதில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அ.தி.மு.க.விடம் கேட்டுள்ளோம் என பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.


Next Story