மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் சாவு


மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் சாவு
x

மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

கறம்பக்குடி வடக்குதெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 38). இவர் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதை கண்ட வீட்டில் உள்ளவர்கள் அவரை கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் மணிவண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story