தனுஷ்கோடிக்கு அகதியாக வர முயன்ற 7 பேர் பிடிபட்டனர்.


தனுஷ்கோடிக்கு அகதியாக வர முயன்ற   7 பேர் பிடிபட்டனர்.
x
தினத்தந்தி 10 Oct 2022 4:18 PM GMT (Updated: 10 Oct 2022 4:27 PM GMT)

தனுஷ்கோடிக்கு அகதியாக வர முயன்ற 7 பேரை இலங்கை கடற்படை பிடித்தது

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையை சேர்ந்தவர்கள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் நேற்று இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகில் 7 பேர் தனுஷ்கோடிக்கு வர முயன்று உள்ளனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை பிடித்து விசாரித்தபோது 7 பேரும் தமிழகத்திற்கு அகதியாக தப்பிவர இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களை பிடித்துச்சென்று இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story