அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு: சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை


அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு: சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை
x

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

சென்னையில் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாளை இந்த வழக்கு விசாரணை வருகிறது.

நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அடங்கிய அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வத்தின் நடத்தையால் அதிமுகவின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாகவும், அதிமுகவின் செயல்பாட்டிற்கும், உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கும் ஓ.பன்னீர் செல்வம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொருளாளர் ஆன ஓ.பி.எஸ் கட்சி நிதியை விடுவிக்காததால் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈபிஎஸ் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை கோரி 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிவை குறித்தும் ஈபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.


Next Story