அதிமுக சாதி ரீதியான கட்சி அல்ல - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு


அதிமுக சாதி ரீதியான கட்சி அல்ல - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
x

அதிமுக சாதி ரீதியான கட்சி அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை,

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக சாதி ரீதியான கட்சி அல்ல, சாதி அடிப்படையில் புதிதாக பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை. அதிமுகவில் சாதி, மதம், இனம் பார்ப்பதில்லை. அதிமுக எப்போதும் ஒரு தாய் மக்கள்.தொண்டர்கள் ஒருபோதும் காசுக்காக விலைபோக மாட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஏட்டிக்கு போட்டியாக செயல்பட கூடாது.

பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்போம், எடப்பாடி பழனிசாமியை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையின் பேரில் கட்சியின் பலம் நிர்ணயிக்கப்படாது.

அதிமுக தொண்டர்களால் பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார். அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நான் விசுவாசமாக செயல்படுவேன். தொண்டர்களின் புனித ஸ்தலமாக அதிமுக தலைமை அலுவலகம் விளங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story