வாலிபர்கள் குடும்பத்தினருக்கு அண்ணாமலை ஆறுதல்


வாலிபர்கள் குடும்பத்தினருக்கு அண்ணாமலை ஆறுதல்
x
தினத்தந்தி 24 Sep 2022 6:45 PM GMT (Updated: 24 Sep 2022 6:45 PM GMT)

ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபர்கள் குடும்பத்தினருக்கு அண்ணாமலை ஆறுதல்

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நரசிம்மன் மகன் சதீஷ்(வயது 30), பிரகாசம் மகன் பரத் என்கிற செந்தில்(30). நண்பர்களான இவர்கள் இருவரும் பேரங்கியூர் பிடாகம் தென்பெண்ணையாற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களை தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் தேடி வந்த நிலையில் எனதிரிமங்கலம் பகுதியில் சதீஷ் உடல் கரை ஒதுங்கியது. பரத்தின் உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று சதீஷ், பரத் ஆகிய இருவரின் வீடுகளுக்கும் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, சம்பவம் நடந்து இன்றுடன் 8 நாட்கள் ஆகிறது. 2 நாட்களில் சதீஷ் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் பரத்தின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது சம்பந்தமாக உடலை மீட்க மாவட்ட கலெக்டரிடம் பேசிவிட்டு ஒருவேளை அந்த உடல் 5 கிலோ மீட்டர் அல்லது கடலுக்குள் சென்றிருந்தால் உடலைக் கண்டெடுக்க கடலோர காவல் படை உதவி தேவைப்பட்டால் மத்திய உள்துறை அமைச்சரிடம் உதவி கேட்போம். பாதிக்கப்பட்டுள்ள இரு குடும்பத்தினருக்கும் பா.ஜ.க. உதவி செய்யும் என்றார்.


Next Story