அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்


அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்
x

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

ஈரோடு

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, கோபி, பவானி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய விளைபொருட்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பருத்தி 8 ஆயிரத்து 356 மூட்டைகள் கொண்டு வரப்பட்டது.

இது (குவிண்டால்) ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 429-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 249-க்கும் என மொத்தம் ரூ.1 கோடியே 97 லட்சத்து 5 ஆயிரத்துக்கு ஏலம்போனது. தேங்காய் 2 ஆயிரத்து 649 கொண்டுவரப்பட்டது. இது (கிலோ) குறைந்தபட்ச விலையாக ரூ.17.27-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.21.37-க்கும் என மொத்தம் ரூ.28 ஆயிரத்து 440-க்கு விற்பனையானது.

கொப்பரை தேங்காய்

கொப்பரை தேங்காய் 81 மூட்டைகள் கொண்டுவரப்பட்டது. இது (குவிண்டால்) ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 789-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 629-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 653-க்கு ஏலம்போனது. எள் 7 மூட்டைகள் கொண்டு வரப்பட்டது. இது (கிலோ) குறைந்தபட்ச விலையாக ரூ.140.89-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.150.81-க்கும் என மொத்தம் ரூ.38 ஆயிரத்து 953-க்கு விற்பனையானது.

ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் விவசாய விளைபொருட்களை ஏலம் எடுத்து சென்றனர்.


Related Tags :
Next Story