ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ.15-க்கு விற்பனை


ஈரோட்டில்  தக்காளி கிலோ ரூ.15-க்கு விற்பனை
x

தக்காளி கிலோ ரூ.15-

ஈரோடு

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் வரத்தாகிறது. கடந்த வாரம் 12 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி ரூ.45 -க்கு விற்பனை ஆனது.

இந்த நிலையில் தாளவாடி, சத்தியமங்கலம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று 25 டன் தக்காளி ஈரோடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது. வரத்து அதிகமானதன் காரணமாக தக்காளி விலை குறைந்துள்ளது. நேற்று மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.15- க்கு விற்பனை ஆனது. இதனால் பொதுமக்கள் கிலோ கணக்கில் தக்காளியை வாங்கிச்சென்றனர்.


Related Tags :
Next Story