இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கோரி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்


இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட  மீனவர்களை மீட்க கோரி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  கடிதம்
x
தினத்தந்தி 14 Jan 2024 4:15 PM GMT (Updated: 14 Jan 2024 4:56 PM GMT)

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், 13.01.2024 அன்று நெடுந்தீவு அருகே மூன்று விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரத்தை இலங்கை அரசுடன் உரிய தூதரக வழிமுறைகள் மூலம் எடுத்துச் சென்று, இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் . என தெரிவித்துள்ளார்.


Next Story