"பிரதமர் மோடிக்கு மேடையில் வைத்து வகுப்பு எடுத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு


பிரதமர் மோடிக்கு மேடையில் வைத்து வகுப்பு எடுத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x

தமிழகம் ‘நம்பர் ஒன் மாநிலம்’ என்பதே பெருமை என்று முதல்-அமைச்சர் உழைத்து வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரித்துள்ளார்.

சென்னை,

திமுக இளைஞரணி சார்பில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் கலைஞர் 99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திருச்சி சிவா, மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் முதல் நிகழ்ச்சி இது. அதுவும் கலைஞரின் பிறந்த நாள் நிகழ்ச்சியாக இருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கலைஞர் இன்னும் நம்மோடுதான் இருக்கிறார். அவருடைய எண்ணம் தான் நம்மை இன்னும் வழிநடத்தி செல்வதாக நினைக்கிறேன்.

இன்று பலபேர் திராவிட மாடல் ஆட்சி குறித்து விளக்கங்கள் என்று கேட்கிறார்கள . திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்பது குறித்து நான் ஒரு சிறிய விளக்கத்தை சொல்கிறேன். பத்து நாட்களுக்கு முன்பு நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்திருந்தார்.

மோடி அவர்களையே மேடையில் வைத்து விட்டு இதுதான் திராவிட மாடல் ஆட்சி, இதுதான் மாநில சுயாட்சி என்று மேடையிலேயே வகுப்பு எடுத்தவர் நம்முடைய முதல்-அமைச்சர். அதுதான் திராவிட மாடல் ஆட்சி.

'நம்பர் ஒன் முதல்வர்' என்று பெயர் எடுத்துவிட்டாலும், தமிழகம் 'நம்பர் ஒன் மாநிலம்' என்பதே பெருமை என்று முதல்-அமைச்சர் உழைத்து வருகிறார்."

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story