கட்டுமான பணி தரமானதாக இல்லை என புகார்: தடுப்பணையில் பொதுமக்கள் முற்றுகை


கட்டுமான பணி தரமானதாக இல்லை என புகார்: தடுப்பணையில் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 Jun 2023 9:13 PM GMT (Updated: 1 July 2023 9:56 AM GMT)

கட்டுமான பணி தரமானதாக இல்ல என புகார் கூறிய பொதுமக்கள் தடுப்பணையில் முற்றுகையிட்டனர். இதனால் கெங்கவல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

கெங்கவல்லி:

தடுப்பணை

கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 4 அடி அகலத்தில் 150 அடி நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணை கடந்த சில மாதங்களாக கட்டப்பட்டு வந்தாலும், தரம் இல்லாமல் கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒப்பந்ததாரரிடம் முறையிட்ட மக்கள், தடுப்பணையை தரமானதாக கட்டும்படி வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையே பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பணை கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பரபரப்பு

அப்போது தடுப்பணையை தரமானதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story