தொடர் வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை


தொடர் வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை
x
தினத்தந்தி 3 Nov 2023 2:07 AM GMT (Updated: 3 Nov 2023 5:18 AM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக கனமழை பெய்து வருவதால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இதற்கிடையில், அருவியில் சீராக தண்ணீர் வரத்து இருந்ததால், சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story