சிறப்பு முகாமில் 51 ஆயிரத்து 877 பேருக்கு கொரோனா தடுப்பூசி


சிறப்பு முகாமில் 51 ஆயிரத்து 877 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

சிறப்பு முகாமில் 51 ஆயிரத்து 877 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 1,220 இடங்களிலும், மாநகர பகுதிகளில் 600 இடங்களிலும் என மொத்தம் 1,820 இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடத்தப்பட்டன. இது தவிர மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முகாம்கள் நடந்தன. கம்பரசம்பேட்டை துணை சுகாதார நிலையம், தில்லைநகர் மக்கள் மன்றம், தெப்பக்குளம் பிஷப்ஹீபர் நர்சரி பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் முகாமை, கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் நேற்று 51 ஆயிரத்து 877 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்டு முதல் தவணை செலுத்திக்கொண்ட 1,158 பேரும், 2-வது தவணை செலுத்திக்கொண்ட 1,159 பேரும், முன்னெச்சரிக்கை தவணை செலுத்திக்கொண்ட 41 ஆயிரத்து 129 பேரும், கோவாக்சின் முதல் தவணை செலுத்திக்கொண்ட 1,463 பேரும், 2-ம் தவணை செலுத்திக்கொண்ட 1,517 பேரும், முன்னெச்சரிக்கை தவணை செலுத்திக்கொண்ட 5,451 பேரும் அடங்குவர்.


Next Story