கடலூர் சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி


கடலூர் சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
x

கடலூர் சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர்

கடலூர்,

கடலூர் சொரக்கல்பட்டில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் அந்தோணியார் பெருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று இரவு 8 மணி அளவில் தேர் பவனி நடந்தது. முன்னதாக பங்கு தந்தை அந்தோணி லூர்துராஜ் தலைமையில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டது. அதன்பிறகு தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story