அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

சேலம்:

சேலம் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமாயி தலைமை தாங்கினார். கடந்த ஜனவரி மாதம் முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் செல்வம், குழந்தைவேலு, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story