மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி அருகே நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாளையங்கோட்டை கிளை செயலாளர் கோபாலன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story