கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தென்காசி
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கிராம அலுவலர்களுக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும், சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணைச் செயலாளர் ராம்குமார், பொருளாளர் ஜெயராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. சங்கரன்கோவில், சிவகிரி, திருவேங்கடம் தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story