தர்மபுரியில் அனுமதியின்றிமறியலில் ஈடுபட முயன்ற 111 பேர் மீது வழக்கு


தர்மபுரியில் அனுமதியின்றிமறியலில் ஈடுபட முயன்ற 111 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 Feb 2023 7:00 PM GMT (Updated: 17 Feb 2023 7:00 PM GMT)
தர்மபுரி

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து உரிய அனுமதியின்றி மறியலில் ஈடுபட முயன்றதாக 111 தொழிலாளர்கள் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story