பள்ளிபாளையம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து முதியவர் சாவு


பள்ளிபாளையம் அருகே  வாய்க்காலில் தவறி விழுந்து முதியவர் சாவு
x

பள்ளிபாளையம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து முதியவர் சாவு

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அடுத்த சின்னார்பாளையம் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 60). சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலை சின்னார்பாளையம் வாய்க்காலில் இறந்து உடல் மிதந்து வந்தது. தகவல் அறிந்து சென்ற வெப்படை போலீசார் இறந்த நடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடிபோதையில் வாய்க்கால் பகுதியில் நடந்து சென்றபோது, கால் தவறி வாய்க்காலுக்குள் விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story