சேலையில் தீப்பிடித்து சிறுமி சாவு


சேலையில் தீப்பிடித்து சிறுமி சாவு
x
தினத்தந்தி 29 April 2023 7:00 PM GMT (Updated: 29 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மந்திரி கவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவருடைய மகள் பிருந்தா (வயது 17). இவர் கடந்த 27-ந் தேதி மண்எண்ணெய் அடுப்பில் வெந்நீர் போட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிருந்தா அணிந்திருந்த சேலையில் தீப்பிடித்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிருந்தா நேற்று இறந்தார். இதுகுறித்து கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story