தமிழகத்தில் இனி கால் நூற்றாண்டுகள் தி.மு.க. ஆட்சி தான் நடக்கும்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு


தமிழகத்தில் இனி கால் நூற்றாண்டுகள் தி.மு.க. ஆட்சி தான் நடக்கும்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு
x

முதல்-அமைச்சரின் தொலைநோக்கு திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது என்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசினார்.

சென்னை,

வட சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பிரசாரம் செய்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். பெண்கள் முன்னேற்றத்திற்கு பல நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

மக்களின் பிரச்சினைகளை திறம் அணுகி தீர்வு காண்பதல் கொளத்தூர் தொகுதியிலேயே பதிவாகின்ற வாக்குகளில் 75 சதவீதம் அளவிற்கு உதயசூரியன் சின்னத்திற்கு கிடைக்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.இனி கால் நூற்றாண்டுகள் தி.மு.க. ஆட்சி தான் தமிழகத்திலேயே நடக்கும். முதல்-அமைச்சரின் தொலைநோக்கு திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


Next Story