புதுச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


புதுச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

புதுச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி திமுக நிர்வாகி இல்லத் திருமண விழவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது,

புதுச்சேரி மீது எனக்கு தனிப்பாசமே உண்டு. கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி. புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் யாரும் பிரித்துப் பார்க்க முடியாது.

திராவிட இலக்கியத்தின் தலைநகரம் என புதுச்சேரியை கூறலாம். ஆளுநர் ஆட்டி படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது. புதுச்சேரியில் திமுகவின் ஆட்சி நிச்சயம் மீண்டும் அமையும். தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும். நமக்குள் போட்டி இருக்க வேண்டுமே தவிர பொறாமை இருக்க கூடாது என்றார்.

மேலும், புதுச்சேரியில் மதவாத ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.புதுச்சேரி முதல்வர் நல்லவர் தான், ஆனால் வல்லவராகவும் இருக்க வேண்டும் . புதுச்சேரியில் தற்போது நடக்கும ஆட்சி மக்களுக்காக நடைபெறவில்லை. திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு வருவது தற்போதைய தேவை என்றார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


Next Story