ஓபிஎஸ் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார்- தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு
ஓ.பன்னீர் செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் என எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
சென்னை
ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் குறித்து முறையீடு செய்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு ஒன்று தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை
*ஓ.பன்னீர் செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார்
*பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்துகின்றனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் பதில் மனுவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story