பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; அறை இடிந்து தரைமட்டம்


பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; அறை இடிந்து தரைமட்டம்
x

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று அதிகாலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்குள்ள அறை இடிந்த தரைமட்டமானது.

விருதுநகர்


விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று அதிகாலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்குள்ள அறை இடிந்த தரைமட்டமானது.

பட்டாசு ஆலையில் விபத்து

விருதுநகர் அருகே உள்ள வி.ராமலிங்கபுரத்தில் சிவகாசி போஸ் காலனியை சேர்ந்த மாரிமுத்து (வயது 48) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் தயாரிக்கப்பட்ட பேன்சி ரக பட்டாசுகளை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு சென்று விட்டனர். நேற்று அதிகாலையில் ஒரு அறையில் இருந்த பேன்சி ரக பட்டாசுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் பட்டாசு இருந்த அறை இடிந்து தரைமட்டமானது.

பாதிப்பு இல்லை

இதுபற்றிய தகவலின் பெயரில் விருதுநகர் மற்றும் சிவகாசியில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெடிவிபத்து அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் அந்த நேரத்தில் தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இதுபற்றி வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story