தனியார் நிறுவன மேலாளரை மிரட்டி ரூ.34 ஆயிரம் பறிப்பு


தனியார் நிறுவன மேலாளரை மிரட்டி ரூ.34 ஆயிரம் பறிப்பு
x
தினத்தந்தி 13 July 2022 7:00 PM GMT (Updated: 13 July 2022 7:00 PM GMT)

பள்ளிபாளையத்தில் போலீஸ் எனக்கூறி தனியார் நிறுவன மேலாளரை மிரட்டி ரூ.34 ஆயிரம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையத்தில் போலீஸ் எனக்கூறி தனியார் நிறுவன மேலாளரை மிரட்டி ரூ.34 ஆயிரம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

தனியார் நிறுவன மேலாளர்

பள்ளிபாளையத்தை அடுத்த மொளசி அருகே நல்லியம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சதீஷ்குமார் (வயது 35). தனியார் நிறுவன மேலாளர். இவர், மோட்டார் சைக்கிளில் உறவுக்கார பெண்ணுடன் பரமத்தியில் இருந்து பள்ளிபாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் பழுதானதாக தெரிகிறது. அதனால் மெக்கானிக்கை வர சொல்லிவிட்டு அவருக்காக காத்திருந்தார்.

அங்கு வந்த ஒருவர் தான் போலீஸ் எனவும், உங்கள் மீது சந்தேகமாக உள்ளது எனவும் கூறியுள்ளார். போலீஸ் நிலையத்துக்கு வரும்படியும் கூறியதாக தெரிகிறது. இதில் பயந்து போன சதீஷ்குமார், அந்த நபரிடம் தங்களை விட்டுவிடும்படி கூறியுள்ளார். உடனே அந்த நபர், அவரிடம் இருந்த வாட்ச், ரூ.34 ஆயிரம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு மொளசி போலீஸ் நிலையத்தில் வந்து வாங்கிக்கொள்ளும்படி கூறி விட்டு சென்றார்.

கைது

இதற்கிடையே சதீஷ்குமாரை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர், இன்னும் 4 லட்சம் வேண்டும் இல்லை என்றால் உங்கள் மீது திருட்டு வழக்கு போடுவேன் என்று கூறியதாக தெரிகிறது. இதில் சந்தேகம் அடைந்த சதீஷ்குமார், அந்த நபர் குறித்து மொளசி போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் ராமசாமி மகன் மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து அவரை சிறயைில் அடைத்தனர். மேலும் மணிகண்டன், வேறு யாரிடமாவது இதுபோன்று பணம் பறித்துள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.


Next Story