விவசாயி விஷம் குடித்து தற்கொலை


விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x

காணை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

கண்டாச்சிபுரம் தாலுகா ஒட்டன்காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 46), விவசாயி. இவர் கடந்த 8 மாதங்களாக சிறுவாக்கூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ஏழுமலை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story