இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு நிதியுதவி


இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு நிதியுதவி
x

இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த மாயகிருஷ்ணன், கடந்த ஜூன் மாதம் இறந்தார். இதையடுத்து அவருடன் கடந்த 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசார் வாட்ஸ்-அப் குழு மூலம் ஒன்றிணைந்து, சுமார் 2,685 பேர் ரூ.13 லட்சத்து 51 ஆயிரம் நிதி திரட்டினர்.

இதைத்தொடர்ந்து மறைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாயகிருஷ்ணனின் குடும்பத்தினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைத்து, போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் அந்த நிதி வழங்கப்பட்டது. அந்த பணத்தை எதிர்கால தேவைக்கு சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 1997 பேட்ச் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story