தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை


தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை
x

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நாட்டுப்படகு

ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன் தலைமையில் மீனவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:- ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் ஏராளமான நாட்டுப் படகுகளும், விசைப்படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். பெரும் புயல், மழை, சூறாவளி காற்று சமயங்களில் படகுகள் ஒன்றோடுஒன்று மோதி ஏராளமான படகுகள் சேத மடைந்தும், அழிந்தும் மீனவர்களுக்கு பெரும் பாதிப்பையும் வாழ்வாதார இழப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

மீனவர்களின் அவதியை போக்கும் வகையில் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் சார்பில் பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இதுவரை மீனவர்கள் நலனுக்காக தூண்டில் வளைவு அமைத்து தரப்படவில்லை.

தூண்டில் வளைவு

எனவே பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் மீனவர்கள் பயமின்றி படகுகளை நிறுத்தி வைக்கவும், அச்சமின்றி தொழில் செய்யவும் வழிவகை செய்யும் வகையில் அரசு உடனடியாக தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.


Next Story