ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை


ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை
x

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கைது

ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 21-ந் தேதி ஒரு விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற 7 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து, மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனர்.

அந்த மீனவர்கள் 7 பேரும் நேற்று மன்னார் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 7 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டதுடன், படகின் மீதான விசாரணை வருகிற செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடைபெறும் என்றும், அன்று படகின் உரிமையாளர் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

விரைவில் தமிழகம் வருகை

விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story